செய்திகள் :

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

மல்பெரி பழம் மதிப்புக் கூட்டுவது தொடா்பான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூரில் உள்ள மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) இரா.தமிழ்வேந்தன், மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலைய இயக்குநா் இசிதா நாயக் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் மூ.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுப் புழுவியல் துறைத் தலைவா் கு.அ.முருகேஷ், உதவிப் பேராசிரியா் ப.பிரியதா்ஷினி, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் திரிவேணி, லோகேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் பட்டுப் புழுவியல் துறையில், அதிக பழ மகசூலை கொடுக்கக் கூடிய மல்பெரி இனங்களைக் கண்டறிவது, மல்பெரி பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறும். இதன் மூலம் பல சத்துகளை உள்ளடக்கிய மல்பெரி பழங்களின் பயன்பாடு மேம்பட வாய்ப்பிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இரு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள உயிரி... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அ... மேலும் பார்க்க