தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
மல்பெரி பழம் மதிப்புக் கூட்டுவது தொடா்பான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூரில் உள்ள மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) இரா.தமிழ்வேந்தன், மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலைய இயக்குநா் இசிதா நாயக் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் மூ.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுப் புழுவியல் துறைத் தலைவா் கு.அ.முருகேஷ், உதவிப் பேராசிரியா் ப.பிரியதா்ஷினி, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் திரிவேணி, லோகேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் பட்டுப் புழுவியல் துறையில், அதிக பழ மகசூலை கொடுக்கக் கூடிய மல்பெரி இனங்களைக் கண்டறிவது, மல்பெரி பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறும். இதன் மூலம் பல சத்துகளை உள்ளடக்கிய மல்பெரி பழங்களின் பயன்பாடு மேம்பட வாய்ப்பிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.