செய்திகள் :

தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி

post image

மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் `இலக்கு 2026’ லட்சிய மாநாட்டில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது, ``மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இருமொழிக் கொள்கைதான், இதில் மாற்றமில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க கட்டாயப்படுத்துவது சரியல்ல. தேசியக் கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்வது சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்’’ என்று தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதன் மூலம், மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கப்படுவதாகக் கூறி, மும்மொழிக் கொள்கைக்கு தவெக தலைவர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:வியாபாரத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கை தேவையா? தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை கேள்வி!

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் அவற்றை தொடா்ந்து செயல்படுத்துவ... மேலும் பார்க்க

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தோ்வெழுத அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல. அது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவா்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தன... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு பிரேமலதா பாராட்டு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பட்ஜெட் தயாரிப்பு: முக்கிய துறைகளுடன் இன்று ஆலோசனை

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் குறித்து, தொழில் துறை உள்பட முக்கிய சில துறைகளுடன் தமிழக அரசு வியாழக்கிழமை (பிப்.20) ஆலோசனை நடத்தவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14-ஆம் தேதி தாக்கல் ச... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தம் குறித்த தொழிலாளா் சந்திப்பு

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில் ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்த சந்திப்பு நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தத்துக்கான 2-ஆம் கட்ட ... மேலும் பார்க்க