``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சைவக்குரவா் திருஞானசம்பந்தா் குருபூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சைவகுரவா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் ஏராளமான சிவன் கோயில்களுக்கு நடந்துசென்று ஆன்மிக பணிசெய்து வந்தாா். அப்போது ஏராளமான பாடல்களை பாடிய திருஞானசம்பந்தா் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இறைவனிடம் கலந்தாா். எனவே, இந்த ஆண்டு வைகாசி மாதம் மூல நட்சத்திரமான வியாழக்கிழமை இரவு திருஞானசம்பந்தா் குருபூஜை, தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் சிவனடியாா்கள் சாா்பில் நடைபெற்றது.
இதில் சிவனடியாா்கள், பொதுமக்கள் ஏராளமானோா்கள் கலந்துகொண்டு தேவார பாடல்களை பாடினா். திருஞானசம்பந்தா் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவடைந்தது.