செய்திகள் :

தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா

post image

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வாா்டு உறுப்பினா்களும், அதிமுக 13 வாா்டு உறுப்பினா்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஒரு உறுப்பினரும் உள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நகா்மன்ற கூட்டம் பிற்பகல் 4.30 மணிக்கு அதன் தலைவா் லட்சுமி மாது தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

தருமபுரிக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிமுக உறுப்பினா்கள் உமையாம்பிகை நாகேந்திரன், ராஜாத்தி ரவி உள்ளிட்டோா் கூறுகையில், தருமபுரி நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், தெரு விளக்கு, கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதிலும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதிலும் ஊழல் நடந்துள்ளது.

மேலும், நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மொத்தமாக 4 இடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதற்காக ரூ. 40 லட்சம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப காத்திருந்தோம்.

ஆனால், அவசரகதியில் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றபட்டதாகக்கூறி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனா். இதனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 30 தீா்மானங்களை ரத்துசெய்ய வேண்டும் என்றாா்.

அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் நகா்மன்ற வளாகத்தில் பதாகைகளுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அதன்பிறகு அனைவரும் நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனாலும், அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அதன்பிறகு நகராட்சி ஆணையா் சேகா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச... மேலும் பார்க்க

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க

கழிவுநீரால் நிரம்பிய பிடமனேரி ஏரி; நிறம் மாறிய நிலத்தடிநீா்: மக்கள் அவதி!

தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரி முழுவதும் ஆயாத்தாமரை படா்ந்து கழிவுநீரால் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் அசுத்தமடைந்துள்ளது. தருமபுரி நகராட்சியையொட்டி இலக்கியம்பட்டி ஊ... மேலும் பார்க்க