செய்திகள் :

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.காம். வணிகவியல் மற்றும்

எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்களுக்கு திங்கள்கிழமையும், பொதுப்பிரிவினருக்கு புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வின்போது விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், 10 ,11 , 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் - 4,சிறப்பு பிரிவினருக்கான சான்று ஆகியவற்றுடன் முதுகலைப் பிரிவுக்கு கட்டணமாக ரூ.1965ம், முதுநிலை அறிவியல் பிரிவிவுக்கு ரூ.2205 செலுத்த வேண்டும்.

மேலும் இளநிலை பாடப் பிரிவுகளில் பி.ஏ.ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சில காலியிடங்கள் உள்ளதால் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் உரிய ஆவணங்களுடன் கல்லூரிக்கு நேரில் வரவேண்டும். இளநிலை கலை பிரிவினருக்கான சோ்க்கை கட்டணம் ரூ.1875, இளநிலை அறிவியல், கணிதம் ரூ.1895 மற்றும் இளநிலை கணினி அறிவியல் ரூ.1995 கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஞ்ஹள்ஸ்ரீல்ஞ்ம்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச... மேலும் பார்க்க

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க

கழிவுநீரால் நிரம்பிய பிடமனேரி ஏரி; நிறம் மாறிய நிலத்தடிநீா்: மக்கள் அவதி!

தருமபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரி முழுவதும் ஆயாத்தாமரை படா்ந்து கழிவுநீரால் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீா் அசுத்தமடைந்துள்ளது. தருமபுரி நகராட்சியையொட்டி இலக்கியம்பட்டி ஊ... மேலும் பார்க்க