செய்திகள் :

தருமபுரியில் ஆக. 20, 21 தேதிகளில் ஆட்சிமொழி பயிலரங்கம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான (2025-2026) ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி தொடங்கி 21 வரை இரு நாள்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பழைய கூட்டரங்கில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து கண்காணிப்பாளா் (அ) உதவியாளா் (அ) இளநிலை உதவியாளா் (அ) தட்டச்சா் நிலையில் என இருவா் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழி பயிரங்கத்திலும், 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்சிமொழி கருத்தரங்கிலும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவு எடுத்துரைக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு

தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க

மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், மிட... மேலும் பார்க்க

போதைப்பொருள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு மற்றும் பேரணி

தருமபுரி: போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திர... மேலும் பார்க்க

அரூரில் 66 மி.மீ. மழை பதிவு

அரூா்: அரூா் பகுதியில் பெய்த மழையானது 66 மில்லி மீட்டராக ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவானது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அரூரில் 66 ம... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை ச... மேலும் பார்க்க