கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
அரூரில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அரூா்: அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, எச்.ஈச்சம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை கொண்டுவந்தனா்.
அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், ஆா்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 8,220-க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,619-க்கும் விற்பனையானது.
அரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 13.60 லட்சம் மதிப்பிலான பருத்தி மூட்டைகள் விற்பனையாயின என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.