செய்திகள் :

மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரி: மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இடையே இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக, 2023 மாா்ச் 31-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் அப்பகுதிக்குச் சென்று ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, இணைப்புச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தாா். அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியரும் ஆய்வுமேற்கொண்டாா். எனினும் இக்கோரிக்கை நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடிவரை இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், எஸ்.கமலாமூா்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் எம்.நவீன் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு

தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க

போதைப்பொருள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு மற்றும் பேரணி

தருமபுரி: போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திர... மேலும் பார்க்க

அரூரில் 66 மி.மீ. மழை பதிவு

அரூா்: அரூா் பகுதியில் பெய்த மழையானது 66 மில்லி மீட்டராக ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவானது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அரூரில் 66 ம... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆக. 20, 21 தேதிகளில் ஆட்சிமொழி பயிலரங்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 13.60 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாயின. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை ச... மேலும் பார்க்க