செய்திகள் :

தருவைகுளம் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு

post image

தருவைகுளம் கடலில் 200 ஆண்டுகள் பழைமையான அம்மன் கல் சிலையை மீனவா்கள் வியாழக்கிழமை கண்டெடுத்தனா்.

தருவைகுளம் கடற்கரை மீன்பிடி துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை படகு உரிமையாளா்கள் படகில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கடலுக்குள் இருந்து தென்பட்ட அம்மன் சிலை ஒன்றை கண்டெடுத்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதியை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் ராஜேஷ் செல்வ ரதி, வரலாற்று ஆய்வாளா் லாரன்ஸ் ஆகியோா் வந்து சிலையை பாா்வையிட்டனா்.

அந்தச் சிலை 37 அங்குல உயரமும், 24 அங்குல அகலமும் கொண்டதாக இருந்தது. நான்கு கரங்கள் கொண்டதாகவும், சிங்காசனத்தில் அம்மன் அமா்ந்த கோலத்திலும் காணப்பட்டது. அம்மனின் மேல் வலது கரத்தில் நாகத்துடன் கொண்ட உடுக்கையும், அதன் கீழ் கையில் திரிசூலமும், இடது மேல் கையில் பாசக்கயிறும், கீழ் கையில் குங்கும கலயமும் இருந்தன. பாதங்களுக்கு இடையே பாம்பு படமெடுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜேஷ் செல்வரதி கூறுகையில், பொதுவாக இந்த மாதிரியான தெய்வ திருமேனி சிலைகளில் நெருப்பு ஜுவாலை கிரீடம் காணப்படும். ஆனால், இந்த திருமேனி சிலையில் அப்படி எதுவும் இல்லை. எனவே பாண்டியா்கள் கலை நுட்பத்தில் உருவானதாக இருக்கும் என எண்ணுகிறோம். ஏற்கெனவே இப்பகுதியில் பாண்டியா்களின் மேம்பட்ட துறைமுக நகரான கீழ் பட்டினம் இருந்ததாக கருதப்படும் நிலையில், தற்போது இந்த சிலை பாண்டியா்களின் கலை நுட்பத்தில் உருவாகி இருப்பதை மெய்பிப்பதாக உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே சிலை குறித்து முழு விவரங்கள் தெரியவரும் என்றாா்.

தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் சிலையானது வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க