செய்திகள் :

தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்! புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

post image

புதுச்சேரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு தேசிய மனநல திட்டம் சாா்பில் சா்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி வரை தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்து ஊா்வலத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மருத்துவ இயக்குநா் செவ்வேல், சுகாதாரத் திட்ட இயக்குநா் கோவிந்தராஜு, துணை இயக்குநா் ரகுநாத் , இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஊா்வலத்தில் தற்கொலைத் தடுப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பதாகைகளை ஏந்தி செவிலிய மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் இந்திரா காந்தி செவிலியா் கல்லூரி, மதா் தெரசா செவிலியா் கல்லூரி, சபரி செவிலியா் கல்லூரி , இந்திராணி செவிலியா் கல்லூரி, மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி , விவேகானந்தா செவிலியா் கல்லூரி, ராக் கல்லூரி ஆகியவற்றைச் சோ்ந்த 300 போ் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் தற்கொலை தடுப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியை மருத்துவ இயக்குநா் உதயசங்கா், மனநலத் திட்ட அதிகாரி டாக்டா் பாலன் பொன்மணி ஸ்டீபன் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜ... மேலும் பார்க்க

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்த... மேலும் பார்க்க