செய்திகள் :

தலைமுடி வளர தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்கள்!

post image

தலைமுடி உதிர்தல் பிரச்னை இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதனை சரிசெய்ய பல வித எண்ணெய்கள், ஷாம்பூக்கள், ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயே போதுமானது என்று அழகு சார்ந்த நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெய் மிக முக்கியமான பொருள். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. இது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு அவசியமானது.

இது தலைமுடியை நன்கு வளரச் செய்வதுடன் தலைமுடி உடைதல் மற்றும் நுனியில் உள்ள முடி வெடிப்புகளைச் சரி செய்கிறது.

ஆனால், தேங்காய் எண்ணெய்யை பலரும் சரியான முறையில் பயன்படுத்தாததாலேயே முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது.

தேங்காய் எண்ணெய்யை முடியின் வேர்க்கால்களில் படும்படி சில நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு 20-30 நிமிடங்கள் விட்டு குளிக்கலாம்.

இரவு தூங்கப்போகும் முன்பாகவும் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு காலையில் குளிக்கலாம். இது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

மேலும், பலன்களைப் பெற தேங்காய் எண்ணெய்யுடன் விளக்கெண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யை கலந்து பயன்படுத்தலாம்.

மிகவும் வறட்சியான அல்லது உடைந்த முடிகளுக்கு இது சிறந்த கண்டிஷனராக இருக்கும். வாரத்திற்கு இரு முறை தேய்த்து குளிக்கலாம்.

சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். குளிப்பதற்கு ரசாயனம் அல்லாத / ரசாயனம் குறைந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தும்போது நல்ல பலன்களைப் பெறலாம்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

How to use coconut oil for hair growth

இதையும் படிக்க | உடல் எடை அதிகரிப்பது தைராய்டு அறிகுறியா? - நம்பிக்கையும் உண்மையும்!

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்தி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இ... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ... மேலும் பார்க்க

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க