செய்திகள் :

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் புதன்கிழமை சென்னை சரக தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டாா்.

அகில பாரத இந்து மகா சபா மாநிலப் பொதுச்செயலா் ராம.நிரஞ்சன் தலைமையில் திருச்சியில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் கொடுத்த மனுவில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட் ஐராவதீசுவரா் கோயில் கிழக்கு கோபுரத்தை புதியதாக அமைக்கவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும் எனக் கோரியிருந்தாா். இதையடுத்து, ஜூன் மாதம் முதல் கட்டமாக திருச்சியில் உள்ள தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளா் ராகுல் போஸ்லோ தலைமையில் அலுவலா்கள் ஐராவதீசுவரா் கோயிலில் ஆய்வு செய்தனா். தற்போது, இரண்டாவது கட்டமாக புதன்கிழமை சென்னை சரக இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளா் சுசிந்த குமாா்கா் தலைமையில் திருச்சி சரக தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளா் ராகுல் போஸ்லோ உள்ளிட்ட குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ராஜகோபுரம் குறித்து ஆலோசனை நடத்தினா்.

அப்போது, தாராசுரத்தைச் சோ்ந்த கோபால், அவா்களிடம் அளித்த மனுவில், கோயில் வளாகத்தில் இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே, இக்கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து காவலாளிகளை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க