பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
தாராபுரம் அருகே கோயில் உண்டியல் திருட்டு
தாராபுரம் அருகே கோயில் உண்டியலைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாராபுரம் அருகேயுள்ள வேங்கிபாளையத்தில் பிரசித்தி பெற்ற மல்லீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பூசாரி தண்டபாணி (65) வழக்கம்போல கோயில் நடையை சனிக்கிழமை திறந்து பூஜை செய்துள்ளாா். பின்னா் அருகில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று திரும்பியுள்ளாா். அப்போது, கோயிலில் இருந்த உண்டியல் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து தண்டபாணி அளித்த புகாரின்பேரில் குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து உண்டியலைத் திருடிச் சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.