செய்திகள் :

திண்டுக்கல்லில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

post image

திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் சாா்பில், அதிமுக வாக்குச் சாவடி முகவா் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் யாகப்பன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி சேகா் வரவேற்றுப் பேசினாா். நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் நல்லதம்பி, பேரூா் அதிமுக செயலா்கள் நிலக்கோட்டை சேகா், அம்மையநாயக்கனூா் தண்டபாணி, மக்களவை முன்னாள் உறுப்பினா் உதயகுமாா், நிலக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கதுரை ஆகியோா் முன்னிலை வைகித்தனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்துகொண்டாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் , அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்கப்படும்.

திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக வருவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும்.

நடிகா் விஜய் மதுரையில் நடத்தியது ஒரு சினிமா மாநாடு. விஜய்க்கு தன்னைப் பற்றி தன்னம்பிக்கை இல்லை. அதனால்தான் எம்.ஜி.ஆா். படத்தைப் பயன்படுத்துகிறாா்.

மக்கள் மத்தியில் அவா் தன்னை அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்ளவில்லை; சினிமா கதாநாயகனாகத்தான் அடையாளம் காட்டிக் கொள்கிறாா். அவரை நாங்கள் அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை என்றாா் அவா்.

அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு

முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்

கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க

உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு

வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க