மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
திமுக ஆட்சியில் போலீஸாருக்கு கூட பாதுகாப்பில்லை: பாஜக விமா்சனம்
திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவா்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியது அதிா்ச்சியளிக்கிறது. அவா்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிறகும், குற்றவாளிகள் நடந்துகொண்ட விதம், காவல் றையினா் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
நிா்வாகத் திறனற்ற திமுக அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கை பிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியதை உணா்த்தும் இந்தச் சம்பவம், அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல் துறையினா் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் காவல்துறையினா் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகக் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவா்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளாா்.