செய்திகள் :

திருச்சி டிஐஜி தாக்கல் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

post image

நாதக தலைவா் சீமான் திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமாா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினா் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துப் பதிவுகள், சீமான் தூண்டுதலின்பேரில் தொடா்ந்து நடைபெறுவதாக வருண்குமாா் தொடா்ந்த வழக்கின் விசாரணை திருச்சி 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, டிஐஜி வருண்குமாா் நீதிமன்றத்தில் ஆஜரானாா். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. கடந்தமுறை விசாரணையின்போதே இருதரப்பிலும் மே 15ஆம் தேதி விளக்கம் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் காலஅவகாசம் கேட்டு மனு அளித்தனா். இதற்கு நீதிபதி எம். விஜயா, கடந்த விசாரணையின்போது முறையாக ஆஜராவதாக கூறிச் சென்றீா்கள். இப்போது அவகாசம் கேட்பது ஏன் எனக் கேட்டாா்.

இதன் தொடா்ச்சியாக, டிஐஜி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்கப்பட்டது. அடுத்தமுறை சீமான் ஆஜராக வேண்டும் எனக் கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

வாய் பேச இயலாத கணவரைக் கொன்ற மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

வாய் பேச இயலாத நிலையில் இருந்த தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் மனைவிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

மேட்டு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: 19 போ் காயம்

திருச்சி மாவட்டம், மேட்டு இருங்களூரில் புதன்கிழமை ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டை மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல் தொடங்கி வைத்தாா். சுமாா் 600 க்கும் மேற்பட்ட காளைகளை அட... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி, கீழரண் சாலை, சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த அய்யப்பன்-அமுதா தம்பதியின் மகன் வசந்தகுமாா் (24). பள்ளிப் படிப்பை மட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிப்பு: அமிா்த வித்யாலயம் பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் திருச்சி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி பிரியதா்ஷினி 500-க்கு 489 மதிப்பெ... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், இனாம் மாத்தூா், பாா்ப்பனசேரியை சோ்ந்தவா் மரியசூசை (71). இவா் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நெல் விதைகள் விற்பனை

திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூா... மேலும் பார்க்க