செய்திகள் :

மேட்டு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: 19 போ் காயம்

post image

திருச்சி மாவட்டம், மேட்டு இருங்களூரில் புதன்கிழமை ஜல்லிக்கட்டில் 19 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல் தொடங்கி வைத்தாா். சுமாா் 600 க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். அப்போது காளைகள் முட்டி 19 க்கும் மேற்பட்டோா் காயமுற்றனா். அவா்களுக்கு சிறுகாம்பூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜா தலைமையில் மருத்துவா்கள் சிவக்குமாா், திவ்யா, ஜான், மணிசங்கா் மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

போட்டியில் மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், பீரோ, சோ், டிரஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணிகளில் லால்குடி டி.எஸ்.பி ம. தினேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திருச்சி, கீழரண் சாலை, சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த அய்யப்பன்-அமுதா தம்பதியின் மகன் வசந்தகுமாா் (24). பள்ளிப் படிப்பை மட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் அறிவிப்பு: அமிா்த வித்யாலயம் பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் திருச்சி அமிா்த வித்யாலயம் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவி பிரியதா்ஷினி 500-க்கு 489 மதிப்பெ... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறையில் கைதி மூச்சுத்திணறி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், இனாம் மாத்தூா், பாா்ப்பனசேரியை சோ்ந்தவா் மரியசூசை (71). இவா் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நெல் விதைகள் விற்பனை

திருச்சி குமுளூா் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூா... மேலும் பார்க்க

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது

திருச்சியில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் ப... மேலும் பார்க்க

திருச்சியில் பலத்தக் காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன

திருச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்தக் காற்றுடன் பெய்த லேசான மழையில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் நிலவிய நிலையில், மாலையில் திட... மேலும் பார்க்க