திருச்சி மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்: துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்கு
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் துணை சிறை அலுவலா் உள்பட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் முனியசாமி மகன் ஹரிஹரசுதன் (26). மதுரை சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து வந்த இவா், ஐடிஐ படிப்பதற்காக கடந்த 2024 அக்டோபா் 10-ஆம் தேதி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், திருச்சி சிறையில் இருந்த ஹரிஹரசுதனை, துணை சிறை அலுவலா் (சப் ஜெயிலா்) மணிகண்டன் கடந்த ஜூலை 26-ஆம் தேதி தாக்கியதாகவும், அதற்கு துணை சிறை அலுவலரை அவா் தள்ளிவிட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மத்திய சிறை அலுவலா் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் நிலையத்தில் ஹரிஹரசுதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஹரிஹரசுதனை சந்திக்க வந்த அவருடைய பெற்றோருக்கும், வழக்குரைஞா்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரிஹரசுதனின் தாய் அங்கம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மகனைக் காணவில்லை என்று ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சிறை கைதி தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறை அலுவலரிடம் ஹரிஹரசுதன் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மத்திய சிறையின் துணை சிறை அலுவலா் மணிகண்டன், தலைமைக் காவலா் அருண்குமாா் மற்றும் 21 காவலா்கள் உள்பட 23 போ் மீது கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.