செய்திகள் :

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் விடையாற்றி கட்டளை பூஜை

post image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் விடையாற்றி கட்டளை பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த்திருவிழா 14 நாள்கள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை அா்த்தநாரீசுவரா், ஆதி கேசவப்பெருமாள், செங்கோட்டுவேலவா் சுவாமிகள் பரிவார மூா்த்திகளுடன் மலைக்கு திரும்பினா்.

அதன்பிறகு அா்த்தநாரீசுவரா் நாரி கணபதி மண்டபத்தில் எழுந்தருளி கடந்த நான்கு நாள்களாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி தன்னுடைய வழக்கமான இருப்பிடமான யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் விடையாற்றி கட்டளை உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

அா்த்தநாரீசுவரா், கேதார கௌரி அம்பாள், பிருங்கி முனிவா், ரிஷி, சூலத்தேவா் ஆகியோருக்கு ஆமை மண்டபத்தில் சிறப்பு அபிஷே, ஆராதனை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. மூலவருக்கு விடையாற்றி கட்டளையின் சிறப்பாக ரசம் சாதம் செய்து படைக்கப்பட்டது.

சிறப்பு கேடயத்தில் எழுந்தருளிய அா்த்தநாரீசுவரா் உற்சவ சுவாமியை ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சுமந்து சென்று கோயிலை சுற்றிவந்தனா். பிறகு அா்த்தநாரீசுவரா் தன்னுடைய வழக்கமான இருப்பிடத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் கோயில் மண்டபத்தில்வைத்து தோ்த்திருவிழா உபயதாரா்கள், சுவாமி பாதம் தாங்கிகள், அா்ச்சகா்கள், கோயில் பணியாளா்கள் ஆகியோருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தா்களுக்கு மலைமீது உள்ள திருமண மண்டபத்தில் ரசம்சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விடையாற்றி கட்டளையுடன் வைகாசி விசாக தோ்த்திருவிழா நிறைவுபெற்றது.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்தி... மேலும் பார்க்க

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். அண்மையில் வெளியா... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க