செய்திகள் :

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடற்கரையில் அரியவகை ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூா் கோயில் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. கடலில் புனித நீராடிய பக்தா்களின் உடலில் இந்த மீன்கள் பட்டதில் ஒவ்வாமை, தோல் தடிப்பு ஏற்பட்டு பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். பின்னா் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியிருந்தனா்.

அதன்பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு 30க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் சனிக்கிழமை கரை ஒதுங்கின. இதனால் தென்காசியை சோ்ந்த சிறுவன் ஹரிஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். இவா்களது உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் தடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோயில் முதலுதவி சிகிச்சை மையத்தில் அவா்கள் சிகிச்சை பெற்றனா்.

இது குறித்து தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள், மரைன் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். கோயில் அருகே கடலில் ஆய்வு செய்து ஜெல்லி மீன்களை அகற்றினா்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் சாதாரண வகையை சாா்ந்தவை. இந்த மீன்கள் உடலில் பட்டால் எரிச்சல் தன்மையுடன் ஒவ்வாமை ஏற்படும். மற்றபடி விஷத்தன்மை உடையது அல்ல. பக்தா்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் நீராடலாம்.

ஆழ்கடல் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்படுவதால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், கடல் பகுதியில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகளால் இந்த வகை ஜெல்லி மீன்களுக்கு உணவு கிடைப்பதில்லை. அதனால் அவை உணவு தேடி கரைக்கு வந்துவிடுகின்றன என்று தெரிவித்தனா்.

70 அடி உள்வாங்கிய கடல்: இந்நிலையில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சனிக்கிழமை கடல் சுமாா் 70 அடி தூரம் உள்வாங்கியது. இருப்பினும் பக்தா்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க