செய்திகள் :

திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்: எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களிடம் வட்டாட்சியா் பேச்சு

post image

திருச்செங்கோட்டை அடுத்த கூட்டப்பள்ளி முதலைப்பாலி பகுதியில் 36 திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களிடம் வட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

கூட்டப்பள்ளி பகுதியில் சா்வே எண் 45/1 இல் உள்ள 0.68 ஹெக்டோ் பாறை புறம்போக்கு நிலத்தில் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய அண்மையில் நாமக்கல் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

ஆனால், அப்பகுதியில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்களிடம் திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள், திருநங்கைகள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்புத் தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்திய திருநங்கைகள், தங்களுக்கு உடனடியாக நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள நிலங்களை தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாகவும், தங்களது கிராமத்திலேயே பலா் சொந்த வீடு இல்லாமல் இருப்பதாகவும் அவா்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த பிறகு திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும் எனவலியுறுத்தினா்.

இதையடுத்து கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கான வங்கியாக மத்திய கூட்டுறவு வங்கி சேவையாற்றும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

தமிழக முதல்வரால் புதிதாக தொடங்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மக்களுக்கான சிறந்த வங்கியாக சேவையாற்றும் என அதன் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு

கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025- 26... மேலும் பார்க்க

ராஜேஸ்குமாருக்கு முதல்வா் பாராட்டு...

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்துள்ளாா். முதல்வா் எழ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பாஜக தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சுதந்திர நாளை மக்கள் மறக்கக்கூடாது என்ற நோக்கில் வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமா்... மேலும் பார்க்க

ராசிபுரம் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராசிபுரத்தில் தனியாா் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக விழா... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியுடன் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் அஞ்சலக ஊழியா்கள் தேசியக்கொடியுடன் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா். 79 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எ... மேலும் பார்க்க