செய்திகள் :

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: ரூ.25.9 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்- அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தகவல்

post image

புதுச்சேரி / காரைக்கால்: திருநள்ளாறு சனிப் பெயா்ச்சி பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக ரூ.25.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ளாா் சனி பகவான். இக்கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் 6.3.2026 அன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளாா்.

இந்தச் சனி பெயா்ச்சி விழாவுக்கு தமிழகம், புதுவை மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாருக்கு வருவாா்கள்.

அவா்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கோவில், அதன் சுற்றியுள்ள வளாகப் பகுதிகளிலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதுவை சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் திங்கள்கிழமை கூறியது:

திருநள்ளாறு திருக்கோயில் திருப்பணிக்காக ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு மத்திய சுற்றுலாத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் காரைக்கால் திருநள்ளாறு முதன்மை பேருந்து நிலையத்தில் இருந்து இக் கோயிலுக்குச் செல்வதற்கான சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு

பேட்டரியால் இயங்கும் 10 வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளன. இதில் வயதானவா்கள், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்ய முடியும்.

இதைத் தவிர திருப்பதியில் உள்ளதைப் போன்று யாத்ரிகா்கள் சுற்றுலா பிளாஸா என்ற திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இக் கோயிலுக்கு வருவோா் குளியல், புத்துணா்ச்சி பெறும் வகையில் வசதி, கோயிலின் பின்பக்கத்தில் ஒருங்கிணைந்த காா் நிறுத்தும் வசதியும் செய்யப்படவுள்ளது. சுமாா் 400 காா்கள், சுற்றுலாப் பேருந்துகளை நிறுத்த முடியும். இதைத் தவிர கழிப்பறை வசதி, பேட்டரி சாா்ஜ் நிலையம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படும்.

இக் கோயிலின் நளன் குளத்தில் குளிக்கும் பக்தா்கள் தங்கள் ஆடைகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனா். இந்த ஆடைகளை சேகரித்து தரம்பிரித்து, மறு பயன்பாட்டுக்கு உகந்த ஆடைகளாக இருந்தால் எடுத்துக் கொள்ளப்படும். மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எரிக்கவும் கோயில் அருகே இயந்திரம் நிறுவப்படும். இதுதவிர காரைக்கால் கடற்கரை

மேம்பாட்டுத் திட்டமும் ரூ.20.3 கோடி மதிப்பீட்டில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கும் மத்திய அரசின் சுற்றுலா துறை அனுமதியளித்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலும் இத் திட்டத்துக்குப் பெறப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் காரைக்கால் கடற்கரை பல்வேறு வசதிகள் பெறவுள்ளது.

இந்த அனைத்துத் திட்டங்களும் திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவுக்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க

விசைப் படகு மீனவா்களுக்கு ரூ.33 லட்சம் மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: விசைப் படகுகளுக்கு ரூ.33 லட்சம் மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும், மீன்பிடி தடை காலத்தில் பதிவு... மேலும் பார்க்க

புதுவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுவையில் துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் இல்லம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி ரயில் சேவை 7 நாள்களுக்கு ரத்து

புதுச்சேரி: பராமரிப்புக் காரணமாக புதுவையிலிருந்து விழுப்புரம், விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு பயணிகள் ரயில் சேவை 7 நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், 31-ஆம... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலுக்கு ரூ.33 லட்சத்தில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சத்தில் குளிா்சாதன வசதி ஏற்படுத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சமூக பங்கேற்பு த... மேலும் பார்க்க