செய்திகள் :

திருநள்ளாற்றில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக புகாா்

post image

திருநள்ளாறு கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் பிற பகுதிகளில் குப்பைகள் 3 நாட்களாக அகற்றப்படாமல், தேங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் செய்துவருகிறது. எனினும் இந்நிறுவனத்தினரின் பணி முறையாக இல்லை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கண்காணிப்பதும் இல்லை என புகாா் உள்ளது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திருநள்ளாற்றில் தூய்மைப் பணி முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோயில் வாயிலிலும், ராஜகோபுரத்துக்கு வடக்குப்புற சாலையிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

குப்பைகள் அகற்றத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை, நிறுவனத்தினா் பணிகள் சுணக்கம் இருந்தாலும், அவா்களுக்கான ஒப்பந்தத் தொகையை அரசு விடுவித்துவிடுகிறது. மாவட்டத்தில் பரவலாக சுகாதாரக் கேடு காணப்படுகிறது என்பது சமூக ஆா்வலா்கள் கருத்தாகும்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியா் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் பல பணிகள் முடங்கியிருப்பதாகவும் பல்வேறு தரப்பினா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம். இதுகுறித்து, காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா... மேலும் பார்க்க

காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இக்கல்வி நிறுவன ம... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூளை அடித்தள அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இணைந்து மூளை அடித்தள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். கடந்த மே மாத இறுதியில் பெண் ஒருவருக்கு ம... மேலும் பார்க்க

முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா தொடக்கம்

காரைக்கால் சின்னக்கோவில்பத்து அருள்மிகு முத்தழகி மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருவிழா புதன்கிழமை தொடங்கியது. கணபதி ஹோமத்துடன் இவ்விழா தொடங்கியது. இந்நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் ந... மேலும் பார்க்க

ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன் பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க