திருப்பத்தூரில் பிரதோஷ வழிபாடு...
ஆடிமாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா் கோவிலில் சுவாமி, அம்பாள், நந்தி, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது காளஹத்தீஸ்வரருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல் திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், முத்துக்குமார சுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
