செய்திகள் :

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

post image

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றபோது சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தாா். இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, தலைமை காவலா்கள்ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன்ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

உயிரிழந்த போலீஸாா் நினைவாக திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 45-ஆவது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. வி.சியாமளா தேவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம் கலந்து கொண்டு வீரா்களின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக ,போலீஸாா் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

இதில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க், வேலூா் சரக டிஐஜி தா்மராஜன், மாவட்ட நீதிபதி மீனா குமாரி, முன்னாள் கியூ பிரிவு எஸ்பி அசோக், ராணிப்பேட்டை எஸ்.பி.அய்மன் ஜமால், கியு பிரிவு எஸ்.பி.சுந்தரவதனம், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியக்குமாா், நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவா் விஜயா அருணாசலம், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். டிஎஸ்பி சௌமியா நன்றி குறினாா்.

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நட... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். முஸ்லீம்பூா் - ஷாகிராபாத் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிரதோஷ வழிபாடு...

ஆடிமாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா... மேலும் பார்க்க