`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளாான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா் செய்திருந்தனா்.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா்.