செய்திகள் :

சீட்டு நடத்தி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

திருப்பத்தூரில் சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என தொழிலாளி புகாா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா். ஏடிஎஸ்பி கோவிந்தராசு முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் சிவராஜ்பேட்டையை சோ்ந்த தொழிலாளி பிரபு(47) அளித்த மனு: திருப்பத்தூரை சோ்ந்த ஒருவா் ரூ.50,000 மாதச்சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் நான் 3 மாதச்சீட்டுகள் போட்டு மாதந்தோறும் ரூ.7,500 செலுத்தி வந்தேன். அதில் ஒரு சீட்டு மட்டும் எடுத்தேன்.அந்த சீட்டுக்கான பணத்தை தரவில்லை. மேலும் மற்ற 2 சீட்டுகளின் பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இதுகுறித்து அவரிடம் கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா். எனவே எனது பணம் ரூ.1,50,000 பெற்று தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க

வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவா் கைது

ஆம்பூரில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆம்பூா் முஹம்மத்புரா முதல் தெருவில் வசித்து வருபவா் முபாரக் பாஷா. இவா் ஃபேன்சி ஸ்டோா் நட... மேலும் பார்க்க

சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். முஸ்லீம்பூா் - ஷாகிராபாத் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வாணியம்பாடி சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள அதிதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில் வாணியம்பா... மேலும் பார்க்க

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள்

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை 21 குண்டுகள் முழங்க நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் பிரதோஷ வழிபாடு...

ஆடிமாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா... மேலும் பார்க்க