திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல், திருப்பூருக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரைவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.