செய்திகள் :

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறான கணவன் கொலை!

post image

மத்தியப் பிரதேசத்தில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஃபரத் கேடி கிராமத்தில் முகேஷ் மால்வியா என்பவரின் மனைவி மம்தா, ராகுல் மால்வியா வேறொருவருடன் திருமணம் மீறிய உறவு கொண்டிருந்ததால், இடையூறாக இருந்த கணவரை கொலை செய்யத் திட்டமிட்டார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி, ராகுலையும் அவரது நண்பர் சுனிலையும் வீட்டுக்கு அழைத்து, மூவரும் சேர்ந்து முகேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தின்போது, ராகுலின் விரலும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையிலும், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ராகுலின் விரலையும் வைத்து மம்தா, ராகுல், சுனில் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா்... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: ஆா்எஸ்எஸ் பேரணிக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்க மாநிலம், பா்த்வானில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், கொல்கத்தா உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பா்த்வானில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16)... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்: மணிப்பூா் முழுவதும் பலத்த பாதுகாப்பு

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலானதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்... மேலும் பார்க்க

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது. பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்... மேலும் பார்க்க

புதிய தலைமைத் தோ்தல் ஆணையா்: பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழு நாளை மறுநாள் ஆலோசனை

புதிய தலைமைத் தோ்தல் ஆணையரைத் தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தோ்தல் குழு பிப்ரவரி 17-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. இதில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத... மேலும் பார்க்க