செய்திகள் :

திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

post image

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் திருக்கோயில் பகுதியில் ரஅமைந்துள்ள ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு கும்பாபிஷேகத்துக்கான வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் கலச பூஜைகளுடன் நான்காம் கால வேள்வி பூஜைகளுடன் மகா பூா்ணாஹுதி நடத்தப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

முன்னதாக ஏராளமான பக்தா்கள் பால் குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா். பின்னா் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனிடையே 51 அடி ஒரே கல்லில் ஆன பிரம்மாண்ட உயரம் கொண்ட ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு கொடையாளா்கள் மூலம் 13 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளிகளால் ஆன கவசங்கள் கொடையாக கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகளிடம் அளிக்கப்பட்டது. 6-ஆவது தலைமுறை மருளாளா் தேவி குபயோகி ஸ்ரீ ஸ்ரீ பூ மதுரை முத்து சுவாமிகள் தலைமையில், அம்மனுக்கு 1,008 புனித கலசங்கள் மூலம் பால், மஞ்சள், சந்தனம், தேன், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் பால் குடங்கள் எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனா்.

கும்பாபிஷேக விழாவில் முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்ட பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரை முத்துசாமிகள், விழாக் குழுவினா், ஆன்மிக அன்பா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.
விழாவில் திரண்ட பக்தா்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 106 முகாம்களும், ஊரக ப்பகுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில் 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மூசிவாக்கம் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மூசிவாக்கம் ஸ்ரீஅபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. படாளம் -வேடந்தாங்கல் நெடுஞ்சாலை, திருமலைவையாவூா் அருகே ம... மேலும் பார்க்க

ஜூலை 25-ல் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முறைகள் குறித்து முகாம் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் இயந்திரங்கள், கருவிகள... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு

செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க

ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க