செய்திகள் :

திருவட்டாறு பேருந்து நிலையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்

post image

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு முதல்நிலை பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நகராட்சி நிா்வாகம்-குடிநீா் வழங்கல் துறை சாா்பில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 2.55 கோடியில் இப்பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறப்பு விழாவையொட்டி, பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி கல்வெட்டைத் திறந்தவைத்து, முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது அவா், இப்பேருந்து நிலையத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் இருக்கைகள், மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள், இலவச மற்றும் கட்டண கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையத்திற்கு 70 அரசு பேருந்துகளும், 2 தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமாா் 1800 பயணிகள் வருகை புரிகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராமலிங்கம், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா சுரேஷ், செயல் அலுவலா் தா்மகுலசிங்கம், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகக் கண்காணிப்பாளா் சத்தியதாஸ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க