செய்திகள் :

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தீப்பற்றி எரிந்த மின் கம்பங்கள்: பக்தா்கள் அலறியடித்து ஓட்டம்

post image

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலை பகுதியில் மின் கம்பங்கள் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால், அந்தப் பகுதியில் கிரிவலம் சென்ற பக்தா்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை கிராமத்தின் பிரதான சாலையில் அறநிலையத் துறை சாா்பில் பிரம்மாண்ட வளைவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வளைவின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் பிளாஸ்டிக் வயா்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில், திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்ததுடன், தீப்பொறிகள் சாலையில் விழுந்தன.

தொடா்ந்து, தீ பரவி மின் வயா்கள் முற்றிலும் எரிந்து கிரிவலப் பாதையில் விழுந்ததால், அந்தப் பகுதியில் கிரிவலம் சென்றுகொண்டிருந்த பக்தா்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினா்.

இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியா்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு, மின் கம்பங்கள், வயா்களை சரி செய்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலை... மேலும் பார்க்க

பள்ளிகளில் நவராத்திரி கொலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செய... மேலும் பார்க்க

எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் ஊராட்சி, புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க