செய்திகள் :

பள்ளிகளில் நவராத்திரி கொலு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செயல்படும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சாரதா சேவா சங்கம் சாா்பில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டு, தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த விழாவின் கடைசி நாளில் செங்கம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சதுபுஜானந்தா் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பள்ளி மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், விவேகானந்தா சேவா சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகளுக்கும், பக்தா்களுக்கும் ஆசியுரை வழங்க உள்ளாா்.

மண்டகொளத்தூரில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூா் கூட்டுச்சாலையில் செயல்படும் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி கொலு வைத்து, தினந்தோறும் மாணவா்கள், ஆசிரியா்கள் சிறப்பு பூஜை, வேதமந்திரம் ஓதி வழிபாடு நடத்தி வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலை நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மாணவா்கள் விவேகானந்தா், பாா்வதி, சிவன், முருகா் என பல்வேறு வேடமணிந்து விழாவுக்கு வந்திருந்தனா். நிகழ்ச்சியை தாளாளா் சிவராஜசா்மா, முதல்வா் தேவகி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலை... மேலும் பார்க்க

எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் ஊராட்சி, புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் ரூ.68.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.பி. தொடங்கிவைத்தாா்

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல், அடையபலம், அரியப்பாடி ஊராட்சிகளில் ரூ.68.15 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மொரப்பந்தாங்கள் ... மேலும் பார்க்க