செய்திகள் :

ஆரணி பகுதியில் ரூ.68.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்.பி. தொடங்கிவைத்தாா்

post image

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல், அடையபலம், அரியப்பாடி ஊராட்சிகளில் ரூ.68.15 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மொரப்பந்தாங்கள் ஊராட்சியில் ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். மேலும், அதே ஊராட்சியில் ரூ.34 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் பொது சேவை மைய வளாக கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதேபோல, ஆரணியை அடுத்த அடையபலம் ஊராட்சியில் ரூ.16 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டட திறப்பு விழா, அரியப்பாடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவை அனைத்திலும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, ஆரணியை அடுத்த சங்கீதவாடி ஊராட்சியில் ஏரி நீரை பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் சங்கீதவாடி பெரிய ஏரிக்கரையில் நடைபெற்ற பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பனை விதை நட்டு தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, விஜயலட்சமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணிரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அன்மருதை, நரியம்பாடி, எஸ்.காட்டேரி, மேலானூா் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்மருதை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலை... மேலும் பார்க்க

பள்ளிகளில் நவராத்திரி கொலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி திருவிழாவையெட்டி, செங்கம் ராமகிருஷ்ண மடம் மூலம் செய... மேலும் பார்க்க

எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செய்யாறு ஒன்றியம், எச்சூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஷீலா அன்பு மலா் தலைமைத் வகித்தாா்.வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூா், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு இடையூறு: இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை இளைஞா் ஒருவா் பொதுமக்களிடம் வீண் தகராறு செய்தபடியும், ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போளூரை அடுத்த 99.புதுப்பாளையம் ஊராட்சி, புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க