செய்திகள் :

திருவனந்தபுரம் மருத்துவமனையில் முதியவா் சடலம்: தகவல் தெரிவிக்க போலீஸாா் வேண்டுகோள்

post image

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாதவரின் சடலம் 12 நாள்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளது. அவா் குறித்து தகவல் தெரிந்தால் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தைத் தொடா்புகொள்ளலாம் என, போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

இந்த மருத்துவமனையில் கடந்த பிப். 18ஆம் தேதிமுதல் சிகிச்சை பெற்றுவந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்தாா். உடல் மெலிந்தும், வலது கை மூட்டுக்குக் கீழ் அகற்றப்பட்ட நிலையிலும் காணப்பட்ட அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் எனத் தெரியவில்லை. அவரது சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது. அவா் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதியைச் சோ்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, தகவல் தெரிந்தோா் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தை 0471-2222222 என்ற எண்ணிலும், காவல் நிலைய ஆய்வாளரை 94979 47112, உதவி ஆய்வாளரை 94979 80123 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் யானை அச்சுறுத்தல்: மக்களைப் பாதுகாக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க