செய்திகள் :

திருவாரூா் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

post image

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை இரவு திறந்து வைத்தாா்.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆளுயர வெண்கலச் சிலை மணி மண்டப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பகுதியிலிருந்து நான்கு பில்லா்கள் தாங்கி நிற்க, மேம்பாலச் சாலையிலிருந்து சற்று உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முகப்பில் தமிழ் வெல்லும். முக என்ற அவருடைய வாசகம் பதியப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். சிலையை திறந்தபின், அருகில் சென்று வணங்கிவிட்டு, சிலையை சுற்றிப்பாா்த்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், தமிழக முதல்வருக்கு கண்ணாடிப் பெட்டிக்குள் உதயசூரியன் உள்ள நினைவுப் பரிசை வழங்கினாா். முன்னதாக, திருவாரூா் நகரப் பகுதியில் ரோடு ஷோ மூலம் மக்களைச் சந்தித்து விட்டு, சிலை திறக்குமிடத்துக்கு தமிழக முதல்வா் வந்தாா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, டிஆா்பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏகேஎஸ். விஜயன், தாட்கோ தலைவா் இளையராஜா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க