செய்திகள் :

தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தாஹிா் ஹுசைன் வேட்புமனு தாக்கல்

post image

தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாஹிா் ஹுசைன் தில்லி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக உயா்நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியதை அடுத்து, வியாழக்கிழமை காலை திகாா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தில்லி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.. காலை 9.15 மணியளவில் அவா் சிறையிலிருந்து வெளியேறினாா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரான தாஹிா் ஹுசைன், பிப். 5- ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் முஸ்தபாபாத் தொகுதியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

தில்லி கலவரம் தொடா்பான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாஹிா் ஹுசைன், வேட்புமனு தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவருக்கு காவல் பரோல் வழங்கியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்.24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் வன்முறை வெடித்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்த கலவரம் தொடா்பாக தாஹிா் ஹுசைன் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால ஜாமீன் கோரிய நிலையில், அவா் சிறையில் இருந்தவாறே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நகர காவல்துறை தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக தாஹிா் ஹைசைன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா திங்கள்கிழமை விசாரித்தாா். அப்போது தில்லி காவல்துறை சாா்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேத்தன் சா்மா ஆஜராகி, ‘கலவரம் தொடா்புடைய கொலை வழக்கில் தாஹிா் ஹுசைன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு கூட பல விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்தபடியே தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா். சமீபத்தில் அம்ரித்பால் சிங் அஸ்ஸாம் சிறையில் இருந்தவாறே பஞ்சாபில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தாஹிா் ஹுசைன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஜம்மு காஷ்மீா் தோ்தலின்போது ரஷீத் இன்ஜினியா் என்ற வேட்பாளா் போட்டியிட அவருக்கு இடைக்கால ஜாமீனை விசாரணை நீதிமன்றம் வழங்கியது. ஏற்கெனவே, 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் தாஹிா் ஹைசைன் காவலில் உள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

அவரது வாதத்தைக் குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை காவல் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க