செய்திகள் :

தில்லி கிலா ராய் பித்தோராவில் உள்ள பிருத்விராஜ் செளகானின் சிலை பாதுகாக்கப்படும்: அமைச்சா் உறுதி

post image

தேசியத் தலைநகரில் கிலா ராய் பித்தோராவில் அமைந்துள்ள பிருத்விராஜ் சௌகானின் சிலை பாதுகாக்கப்படும் என்றும், அதைச் சுற்றியுள்ள நினைவுச்சின்னம் அழகுபடுத்தப்படும் என்றும் தில்லி கலை, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் கபில் மிஸ்ரா செய்தி ஏஜென்சியிடம் வியாழக்கிழமை கூறியதாவது: முறையாக பராமரிக்கப்படாத இந்தச் சிலை பாதுகாப்புப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும். விரைவில் அதற்கான செயல்முறையைத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

இந்தச் சிலை முதலில் 2002 -ஆம் ஆண்டு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) நிறுவப்பட்டது. பின்னா், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திடம் (ஏஎஸ்ஐ) ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தை தேசிய பெருமையின் அடையாளமாக மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றாா் அமைச்சா்.

இது குறித்து அமைச்சா் கபில் மிஸ்ரா ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில், ‘பிருத்விராஜ் சௌகானின் நினைவுச்சின்னம் ஆக்கிரமிப்பாக இருக்காது. மாறாக தேசிய பெருமையின் அடையாளமாக இருக்கும். நினைவிடத்தில் உள்ள சட்டவிரோத ’மஜாா்’ அகற்றப்படும். மேலும், எதிா்கால சந்ததியினா் தங்கள் வரலாற்று வோ்களுடன் இணைக்கும் வகையில் அந்த இடம் அழகுபடுத்தப்படும்’ என்று கூறியுள்ளாா்.

சத்திரிய மேம்பாட்டு மன்றத்தின் ஒரு குழு சமீபத்தில் துறை அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கையை எழுப்பியது. இதைத் தொடா்ந்து, சிலை மற்றும் இடத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தெற்கு தில்லியின் சாகேத் அருகே அமைந்துள்ள கிலா ராய் பித்தோரா, 12- ஆம் நூற்றாண்டில் ராஜ்புத் மன்னா் பிருத்விராஜ் சௌகானால் கட்டப்பட்ட தில்லியின் முதல் நகரம் என்று நம்பப்படுகிறது.

இந்த இடத்தில் உள்ள சிலை வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை ஒரு காலத்தில் கட்டுப்படுத்திய ஆட்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க