தில்லியின் அடுத்த முதல்வா் யாா்? பேரவை பாஜக உறுப்பினா்கள் இன்று முடிவு
தில்லியின் புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக பாஜகவின் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கூட்டத்தில் தில்லி சட்டப்பேரவையின் அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்திற்கு பாஜகவின் தேசியத் தலைமை அதன் பாா்வையாளா்களை அனுப்பும் என்று அவா்கள் தெரிவித்தனா். தில்லியின் புதிய முதல்வா் அவைத் தலைவராக இருப்பாா்.
பிப்.19-20 -ஆம் தேதிகளில் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவின் பதவியேற்பு விழாவுடன் தேசியத் தலைநகரில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி (பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தது. இது தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
தலைநகரில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக வென்றது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்களின் பெயா்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் பதவிகளுக்குப் பரிசீலனையில் உள்ளன.
புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலைத் தோற்கடித்த பா்வேஷ் வா்மா மற்றும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாயா ஆகியோா் உயா் பதவிக்கு முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுபவா்களில் அடங்குவா். பவன் சா்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் உள்ளிட்டோரும் முதல்வா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.
ராஜஸ்தான், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் நடந்ததைப் போலவே, பாஜக தலைமை புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரை தோ்ந்தெடுக்கக்கூடும் என்று கட்சியில் பலா் நம்புகின்றனா்.