செய்திகள் :

தில்லியில் புகழ்பெற்ற ஷீஷ் மஹால் பூங்கா புதுப்பிப்பு: மத்திய அமைச்சா் திறந்து வைத்தாா்

post image

தேசிய தலைநகரில் உள்ள ஷாலிமாா் பாக் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ’ஷீஷ் மஹால் பூங்காவை’ மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

ஷீஷ் மஹால் பூங்காவை மறுசீரமைப்பு பணிகள் தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டி. டி. ஏ) மேற்கொள்ளப்பட்டன, மேலும் இந்திய தொல்லியல் துறையும் (ஏ. எஸ். ஐ) இந்த திட்டத்தில் பணியாற்றியது. இந்நவிகழ்ச்சியில் புதன்கிழமை பேசிய கேந்திர சிங் ஷெகாவத், முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமா்சித்தாா்.

அப்போது பேசிய அவா் , ‘ இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை எல். ஜி. சக்சேனா முதன்முதலில் மேற்கொண்டபோது, தில்லியில் ஒரு வெறுக்கத்தக்க அரசாங்கம் இருந்தது. இப்போது, தில்லியில் இரட்டை என்ஜின் போல பல மடங்கு பலம் கொண்ட அரசாங்கம் இயங்கி வருகிறது‘ என்றாா் கஜேந்திர சிங் ஷெகாவத்.

இந்த திறப்பு விழா நிகழ்சத்சியில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, இந்த அரசாங்கம் தில்லியை ’புதிய தில்லியாக’ மாற்றும் . கடந்த மாதம் அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, பூங்காவை அழகுபடுத்தல் மற்றும் இயற்கையை ரசிக்கும் பணிகளுக்கு தான் உத்தரவிட்டதாக தெரிவித்தாா்.

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த ‘ஷீஷ் மஹால்‘ 17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஷாஜகானால் கட்டப்பட்ட அழகு மிகுந்த கட்டடமாகும். இந்த கட்டடம் கண்ணாடி வேலைப்பாடு மற்றும் முகலாய பாணி கட்டக்கலைக்கு புகழ்பெற்றது. பெரிய முகலாய தோட்ட வளாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான இந்த கட்டடம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க