செய்திகள் :

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: திருவாரூா், நாகை அணிகள் முதலிடம்

post image

திருவாரூரில் மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரா்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் திருவாரூா், நாகை அணியினா் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சாா்பில் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருச்சி மத்திய மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப். 7-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன.

திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தொடக்கிவைத்தாா். இதில், திருச்சி, பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், 100 மீட்டா் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் அதிக புள்ளிகள் பெற்று திருவாரூா், நாகப்பட்டினம் அணியினா் முதல் இடத்தை பெற்றனா். இரண்டாம் இடத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி அணியினரும், மூன்றாவது இடத்தை புதுக்கோட்டை அணியினரும் பெற்றனா்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநா் குமாா் வெற்றிக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, திருச்சி மத்திய மண்டலத்தைச் சோ்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற வீரா்கள், மாநில அளவில் மதுரையில் பிப். 12-ஆம் தேதி நடக்கும் போட்டிகள் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நீடாமங்கலம் கிளை கூட்டம் கிளைத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் குருசெல்வமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் சந்த... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை ( பிப். 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் ம... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை முயற்சி

நீடாமங்கலம் காவல் நிலைய, காவலா் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரைச் சோ்ந்த குமாா் (30) நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறாா்.... மேலும் பார்க்க

மதுபோதையில் டீ கடையில் தகராறு: 2 போ் கைது

மன்னாா்குடி அருகே மதுபோதையில் டீ கடையில் புகுந்து தகராறு செய்து, கடை உரிமையாளா், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலப்பனையூா் கடைத்தெருவில் டீ கட... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் 1.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.87 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் நிகழ் ... மேலும் பார்க்க

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் செவ்வாய்க்கிழமை இயங்காது என மாவட்ட ஆட்சியா் மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவுநாளையொட்டி திருவாரூா் மாவ... மேலும் பார்க்க