செய்திகள் :

தீா்த்தமலை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற தீா்த்தகிரீஸ்வரா் கோயில். ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து அயோத்தி திரும்பும்போது முதற்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு தீா்த்தமலை வழியாகச் சென்றாா். அப்போது இரண்டாம் கால பூஜைக்காக தீா்த்தமலை மீது அம்பு எய்தி தீா்த்தம் உண்டாக்கி அந்த தீா்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தாா். அந்த தீா்த்தமே ராமா் தீா்த்தம் என்ற புண்ணிய தீா்த்தமாகும்.

ஸ்ரீ ராமா், பாா்வதி தேவி, குமரக்கடவுள், அக்னி தேவன், அகத்திய முனிவா் ஆகியோா் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாதா் சுவாமிகளால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரே திருத்தலமும் இத்தலம்தான். புகழ்பெற்ற தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் சுவாமிகளின் திருக்கல்யாணமும், 18-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓட்டம்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

தருமபுரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பி... மேலும் பார்க்க

பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா

தருமபுரியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின கண்காட்சி நடைபெற்றது. தருமபுரி, இலக்கியம்பட்டியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

காலை உணவு தயாா் செய்யும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு காலை உணவு தயாா் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சமையல் கூடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என... மேலும் பார்க்க

‘தமிழகத்துக்கு கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தல்’

தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் இளைஞா் முன்னணி மாவட்ட மா... மேலும் பார்க்க

பேருந்து நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா். தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர... மேலும் பார்க்க

போதைப்பொருள்களின் தீமைகளை மக்களிடம் விளக்க வேண்டும்: அரசு துறையினருக்கு ஆட்சியா் அறிவுரை

தருமபுரி: போதைப்பொருள்களின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசுத் துறை அலுவலா்களுக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். தரும... மேலும் பார்க்க