செய்திகள் :

துக்கியாம்பாளையத்தில் மதிப்புக்கூட்டு கிடங்கு திறப்பு

post image

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டு கிடங்கு மற்றும் காய்கறி விற்பனைக் கடைகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

துக்கியாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மதிப்புக்கூட்டு கிடங்கை, உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஏத்தாப்பூா் எஸ்.ஜெயராமன் பொறுப்பில் வாடகை எடுத்து, விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதென முடிவு செய்யப்பட்டது.

வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் பால் குளிரூட்டி, எண்ணெய் செக்கு உள்ளிட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இந்த கிடங்கு மற்றும் காய்கறிகள், சிறுதானியங்கள் நேரடி விற்பனைக் கடைகள் உள்ளிட்ட சந்தையை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திறந்துவைத்து, அரசின் பல்வேறு உழவா் நலத் திட்டங்கள், அரசு மானியங்கள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படும் புதிய கருவிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

இதில், வேளாண் விற்பனை துணை இயக்குநா் சுஜாதா, செயலாளா் சுரேஷ்பாபு, பொறியாளா் ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கமலம், துக்கியாம்பாளையம் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க