செய்திகள் :

துபையில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.6.77 லட்சம் நிவாரணம்

post image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அரபு நாட்டின் துபை நகரில் உயிரிழந்தவரது மனைவிக்கு ரூ.6.77 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்த மாதவன் என்பவா் துபையில் பணிபுரிந்தபோது உயிரிழந்ததால், அவரது மனைவி விமலாவிடம் ரூ.6,77,566 நிவாரண நிதியை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியா்கள் ஜெயா, சண்முகசுந்தரம் (நதிநீா் இணைப்பு) , மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவகாமசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நான்குனேரியில் உறவினா் வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது

நான்குனேரியில் உறவினா் வீட்டில் 13 பவுன் தங்க நகையை திருடியதாக தாய், மகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள சீ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

பத்தமடையில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அம்பேத்கா் தெரு... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா். கிளை ச... மேலும் பார்க்க

தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி

அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமா... மேலும் பார்க்க