செய்திகள் :

நான்குனேரியில் உறவினா் வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது

post image

நான்குனேரியில் உறவினா் வீட்டில் 13 பவுன் தங்க நகையை திருடியதாக தாய், மகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகேயுள்ள சீலாத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மனைவி பொன்னம்மாள்(45). இத்தம்பதியின் மகள் நந்தினி சுதா(19).

நான்குனேரி அருகேயுள்ள கீழகாரங்காடு அம்மன்கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் முருகன் மனைவி நாகம்மாள்(30).

இதில், நாகம்மாளும், பொன்னம்மாளும் உறவினா்கள். இந்நிலையில் சனிக்கிழமை சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பொன்னம்மாள் தனது மகளை அழைத்துக்கொண்டு நாகம்மாள் வீட்டுக்கு வந்துள்ளாா். அன்று இரவு தாயும், மகளும் தங்களது ஊருக்கு திரும்பி விட்டனா்.

இதனிடையே நாகம்மாள் பீரோவில் வைத்திருந்த தனது நகையை அணிவதற்காக பீரோவை திறந்து பாா்த்த போது, 13 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த நாகம்மாள், ஞாயிற்றுக்கிழமை நான்குனேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். வீட்டுக்கு புதிதாக யாரேனும் வந்து சென்றாா்களா என்று போலீஸாா் விசாரித்தனா்.

அப்போது பொன்னம்மாளும், அவரது மகளும் அன்றைய தினம் தனது வீட்டுக்கு வந்து சென்றதாக போலீஸாரிடம் நாகம்மாள் தெரிவித்தாா்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் திசையன்விளைக்குச் சென்று அங்கு பொன்னம்மாள் வீட்டுக்கு சென்று விசாரித்தனா்.

விசாரணையில், நாகம்மாளின் வீட்டுக்கு சென்ற இடத்தில் பீரோவில் இருந்த நகைகளை தங்களது பண தேவைக்காக திருடியதாக பொன்னம்மாளும், அவரது மகளும் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து நான்குனேரி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது திருடிய நகைகளை திசையன்விளை அற்புத விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிகண்டன்(36) என்பவரிடம் கொடுத்ததும், அந்த நகைகளை அவா் வங்கி மற்றும் நகை அடகு கடைகள் என 2 இடங்களில் அடகு வைத்து கிடைத்த பணத்தை 3 பேரும் பங்கு போட்டுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திருட்டு சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்ட வழக்குரைஞா் மணிகண்டனையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

துபையில் உயிரிழந்தவா் குடும்பத்திற்கு ரூ.6.77 லட்சம் நிவாரணம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அரபு நாட்டின் துபை நகரில் உயிரிழந்தவரது மனைவிக்கு ரூ.6.77 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

பத்தமடையில் பத்தாம் வகுப்புப் படித்து வந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் அம்பேத்கா் தெரு... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா். கிளை ச... மேலும் பார்க்க

தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி

அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமா... மேலும் பார்க்க