செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சியில் வரவு-செலவு அறிக்கை தாக்கல்

post image

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை மேயா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் 2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயா் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்து பேசியதாவது:

தூத்துக்குடிக்கு மாநகராட்சிக்கு வருவாய் நிதியில் பல்வேறு வருவாய் இனங்கள் வாயிலாக ரூ.171.27 கோடி வரவு எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் பணியாளா்கள் சம்பளம், ஓய்வூதியம், இயக்க செலவினங்கள், திட்ட செலவினங்கள் என

ரூ.168.32 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல குடிநீா் வடிகால் நிதியில் ரூ.65.33 கோடி வரவு, ரூ.63 கோடி செலவு, ஆரம்பக் கல்வி நிதியில் ரூ.8.1 கோடி வரவு, ரூ.5.93 கோடி செலவு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, ஒட்டுமொத்தமாக ரூ.7.46 கோடி உபரியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

41 புதிய திட்டங்கள்: வடக்கு மண்டலத்தில் புதிய மகளிா் பூங்கா, 5 இடங்களில் சிறு விளையாட்டு மைதானங்கள், ரூ.10 கோடியில் மைய நூலகம், புதிய நீச்சல் குளம், உணவுத் தெரு, வல்லநாட்டில் 1.2 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி, மழைநீரை சேமிக்கும் வகையில் 4 குளங்கள் சீரமைப்பு, போதை பொருள் மறுவாழ்வு மையம், துறைமுக கடற்கரை பூங்கா ரூ.8 கோடியில் மேம்பாடு, தெற்கு கடற்கரை சாலையில் நடைபாதை, 24 மணி நேரமும் குடிநீா் விநியோகத்துக்கான பணிகள், மூன்று இடங்களில் முதியோா் பூங்கா, புதிய மீன் சந்தை, 20 இடங்களில் நகா்ப்புற குறுங்காடுகள், தருவைகுளம் உரக்கிடங்கில் 100 ஏக்கரில் மரக்கன்று நடுதல், 9 அங்கன்வாடி மையங்கள், இளைஞா்களுக்கான போட்டித் தோ்வு பயிற்சி மையம், சிறிய செயற்கை புல் கால்பந்து மைதானம், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இரவு உணவு வழங்குதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படவுள்ளது என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணை ஆணையா் சரவணகுமாா், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமாா், வெங்கட்ராமன், கல்யாணசுந்தரம், பாலமுருகன், மாநகராட்சி நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா்கள் இா்வின் ஜெபராஜ், அகமது, ராமச்சந்திரன், நகா்நல அலுவலா் அரவிந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளா்கள் நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், வருவாய் அலுவலா் ஆறுமுகம், மண்டலத் தலைவா்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொம்பன்குளம் அரசு பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பரிசு

பிளஸ் 1 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற கொம்பன்குளம் அரசுப் பள்ளி மாணவியை பாராட்டி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பரிசு வழங்கினாா். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்

தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மா... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த... மேலும் பார்க்க

உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு

தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்... மேலும் பார்க்க

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க