செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க மானியம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ரபி பருவத்தில், குறைந்த காலத்தில் நிறைந்த மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு வேளாண் துறை மூலமாக 2025 -26ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் அமைக்க சுமாா் 7300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்விளக்கத் திடலானது கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

மக்காச்சோளம் மக்களிடையே உணவு தானியமாக மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டாலும், கால்நடைகளுக்கு தீவனமாக குறிப்பாக கோழித் தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது எத்தனால் தயாரிக்கும் நிறுவனத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்காச்சோளம் சாகுபடியானது, குறைந்த சாகுபடி செலவினத்திலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவான பயிராகவும் உள்ளது. வீரிய ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூலும் கூடுதல் விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, வருகிற ரபி பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் தொகுப்புகள் செயல்டுத்தப்படவுள்ளன. இந்தத் தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை, நுண்ணுயிா் உரம், நானோ யூரியா இயற்கை உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமாா் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படவுள்ளன. எனவே, விவசாயிகள் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைத்து பயன்பெறுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க