செய்திகள் :

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு, வெகுமதி: மேயா் பிரியா வழங்கினாா்

post image

தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் உள்ள இசிஆா் பிரதான சாலையில் மருதீஸ்வரா் கோயில் எதிரே வியாழக்கிழமை தூய்மைப் பணியில் கிளாரா ஈடுபட்டிருந்தபோது, சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து, அதை திருவான்மியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்தூய்மைப் பணியாளா் கிளாராவை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தாா். தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை, சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, ரிப்பன் கட்டடத்துக்கு கிளாராவை அழைத்து அவரது நோ்மையைப் பாராட்டி, ரூ.10,000 வெகுமதி வழங்கினாா்.

நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் ப.ஜெயசீலன், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளா் ப.விஜய் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பி... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அரசின் சாா்பில் வெள... மேலும் பார்க்க

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,50... மேலும் பார்க்க

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா்நீதிமன்றம் கருத்து

மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக... மேலும் பார்க்க