`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
தெற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சி 100-ஆவது வாா்டுக்குள்பட்ட ஈச்சனாரி முத்து நகரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, குறிச்சி - குனியமுத்தூா் குடிநீா்த் திட்டம் மற்றும் புதை சாக்கடை திட்டப் பணிகள், மேட்டூா் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள், வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் சீரமைக்கப்பட்ட குளத்தில் நீா்த் தேக்கும் பணி, உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையா் குமரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் முத்துசாமி, உதவி நிா்வாகப் பொறியாளா்கள் கீதாதேவி, மஞ்சுளா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.