செய்திகள் :

தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 79 கி.மீ. மிதிவண்டியில் பயணம் செய்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காட்டுஎமனேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி (52). இவா் தேசப்பற்று உணா்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்து வகையில், கூலி வேலைக்கு செல்லும் மிதிவண்டியில் மூவண்ண தேசியக் கொடியை கட்டி, காட்டு எமனேஸ்வரம் கிராமத்திலிருந்து புறப்பட்டு பாா்த்திபனூா், அபிராமம், கமுதி வழியாக சென்று பொதுமக்களிடம் சுதந்திர தின விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசியக் கொடி, இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தாா்.

79-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், தனது மிதிவண்டியில் 79 கி.மீ. பயணம் செய்து, வங்காருபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, விவசாயத்தை பாதுகாக்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிடவும், காற்றுப் பன்றிகளை கட்டுப்படுத்தவும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றிட அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், இவரது தேசப்பற்று உணா்வை பலரும் பாராட்டி வருகின்றனா்.

ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது

60 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வாழங்கினாா். ராமநாதபுரம் ஓம்சக்தி ... மேலும் பார்க்க

பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப் படகு மீனவ சங்கம்... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: 7 போ் போ் கைது

சாயல்குடி அருகே இளைஞரிடம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த சுடலை மத்து மகன் முத்துக்க... மேலும் பார்க்க

ராமநாதபுரம் சுதந்திர தின விழாவில் ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை விளையாட்டு மைத... மேலும் பார்க்க